Thursday 20 October 2011

என்னில் நீ - கவி கிறுக்கல்

"அடி  என்னவளே, உன்னை நான் என்,
புருவங்களுகிடையில்,
கண்ணின் கரு மணிக்குளே,
திமிரிடும் மூச்சுக்குளே,
விரிந்த உதட்டிலே,
தொண்டை குரல்வளையிலே,
நெஞ்சின் குட்டி கைபிடி இருதயத்திலே,
நிதம் சுமந்து
சுகத்தில் திளைக்கிறேன்....!!!!"

- இப்படிக்கு,
காதல் கிறுக்கன்
 

தமிழ் பாடல் - அம்மா வந்தாச்சு - நந்தினி நந்தினி ஒ நந்தினி

Movie: Amma Vandhaachu (1992)
Language: Tamil
Actors: Bhagyaraj, Kushboo
Music Director: Deva
Singers: Mano, Swarnalatha



Wednesday 19 October 2011

மாதவன், ஆர்யாவின் வேட்டை

Madhavan and Arya together for the first time..
Direction : Linguswamy
Music : Yuvan Shankar Raja

லிங்குசாமியின் இயக்கத்தில் மாதவன், ஆர்யா, அமலாபால், சமீராரெட்டி என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் படம் தான் வேட்டை. இப்படத்தில், பெண்களின் கனவு நாயகர்கள் இருவர் இணைந்து நடிப்பது என்பது, பெண் ரசிகர்களுக்கு ஒரே குசி தான், தெளிவாக சொல்லுவது என்றால், முன்னாள் கனவு நாயகன் மாதவன், இந்நாள் கனவு நாயகன் ஆர்யா என்று தான் சொல்ல வேண்டும்.


ஏனெனில் மாதவன் நாற்பதை தொட்ட நடிகர், (அதுதாங்க வயசு) - ஆனாலும் இன்னும் பெண்களை கவரும் புன்னகை, ஆர்யா முப்பதை தொட்ட நடிகர் - அவரின் கண்களே பெண்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. இருவரும் அண்ணன்-தம்பியாக படத்தில் வலம் வர, அக்கா-தங்கையாக வலம் வரும் சமீராரெட்டி, அமலாபால் இவர்களுக்கு சோடி. அதைவிட மாதவன் முதல் முதலாக காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார் - வயசுக்கு ஏற்ற பாத்திரம் என்று தான் சொல்ல வேண்டும். இந்த படம் ஒரு நகைசுவை நிறைந்த படமாக இருக்கும் என தகவல்கள் கசிகின்றன, மற்றும் சமீராரெட்டி பிரிட்டிஷ் பெண்ணாக நடிக்கிறார். இப்பட பிடிப்பில் சமீரா ரெட்டி முதல் முறையாக பயிற்சி இன்றி துவிச்சகரவண்டி செல்லுதும் போது விழுந்து சிறு காயங்களுக்கு உள்ளானதாகா தகவல்கள் வெளியாகின. மற்றும் இந்த படம்   ஆர்யாவுக்கு பெரும் திருப்பு முனையாக இருக்கும் எனவும்  கருத்துகள் நிலவுகின்றன

வெளியாவதற்கு முன்பே பேசப்படும் படமாக இருந்தாலும்..... வெளியான பின்பு தான் முழுமையான விமர்சனகளை எதிர் பார்க்கமுடியும்.

ஆனால் இந்த படம் உச்ச வேகத்தில் சந்தைபடுத்த படுவதாகவும், டிசம்பர் 23 வெளியிட இருபதாகவும் சினி வட்டாரங்கள் தெருவிகின்றன....

பொறுத்திருந்து பார்போம், ஆர்யா-மாதவன் கூட்டணி எப்படி என்று?











Vettai Official Trailer HD

நயன்தாரா ரசிகர்களுக்கு குஷி

மீண்டும் நயன்தாரா சினிமாவில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாக கிசுகிசுக்கள் பரவ  ஆரம்பித்துள்ளன.



"பிரபுதேவாவுடன் ஒற்றுமையாக இருப்பதாக அவர் தெ‌ரிவித்துள்ளார். நயன்தாரா இப்படி கூறினாலும், குழந்தைகளுடன் உள்ள உறவை முறித்தால் மட்டுமே பிரபுதேவாவுடன் திருமணம் என்பதில் உறுதியாக இருப்பதாக நயன்தாராவுக்கு நெருக்கமானவர்கள் தெ‌ரிவிக்கிறார்கள். பிரபுதேவாவுக்கு நெருக்கடி கொடுக்க வேண்டும் என்பதற்காக அவர் மீண்டும் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுவதாகவும் தெ‌ரிவிக்கிறார்கள். நயன்தாரா இன்னும் பல சுவாரஸியமான செய்திகளை‌த் தருவார் என கோடம்பாக்க வட்டாரங்கள் கூறுகின்றன."



மீண்டும் நயன்தாரா வருவாரா?

Tuesday 18 October 2011

கல்கி திரைப்படப்பாடல் - எழுதுகிறேன் ஒரு கடிதம்

இப்பாடலில் என்னை கவர்த்த வரிகள்

"பொல்லாதது உன் பூமி தான் போராட்டம் தான் வாழ்வது,
வராத துன்பம் வாழ்விலே வந்தாலும் வேதம் ஓது
பெறாத வெற்றி இல்லை என்று நீ வேதம் ஓது
ஊமைக்கும் நாக்குகள் வேண்டும், உரிமைக்கு போராட வேண்டுமே..."