Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

Monday, 17 October 2011

படித்ததில் பிடித்தது (கவித்துளிகள்)

"வாழ்க்கை என்பது
ஒரு சந்தர்ப்பம் - நழுவ விடாதிருங்கள்
ஒரு கடமை - நிறைவேற்றுங்கள்
ஒரு இலட்சியம் - சாதியுங்கள்
ஒரு சோகம் - தாங்கிக்கொள்ளுங்கள்
ஒரு போராட்டம் - வென்றுகாட்டுங்கள்
ஒரு பயணம் - நடத்தி முடியுங்கள்"

"அசுரன் பாதி தேவன் மீதி அவனே மனிதன்
ஆக்ரோஷம் பாதி அமைதி மீதி அது வாழ்கை
சுயரூபம் பாதி விஸ்வரூபம் மீதி அது மனித வாழ்கை"

Monday, 10 October 2011

கவி கிறுக்கல்கள்

அன்று,
"அன்றொருநாள் தொலைத்த வைரக்கல்,
வானத்தில் நட்சத்திரமாய் மின்னிட,
ஊரறியா ஊமை உண்மைகள் முகவுரைக்குள் முடிவுரை எழுதிட,
விதியின் அஞ்சலுக்கு, சோகம் முகவரி எழுதிட,
இப்படிக்கு,
திசையறியா பாதசாரி"

இன்று,
"கமா ஒன்று முற்றுபுள்ளியாகும் போது, ஆச்சரியக்குறி ஒன்று எட்டிப்பார்கின்றது !
- இப்படிக்கு,
திசையறிந்த வழிப்போக்கன்,"

அதாவது, காலங்கள் மாற கோலங்களோடு காட்சிகளும் கட்சிகளும் மாறுதல் அவசியமன்றோ...!!!